in

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய நபரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய நபரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேவியக்காடு கொற்கை பகுதியில் சாராய ஊரல் போட்டு சாராயம் காய்ச்சுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .அதன் பேரில் அப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை தெரு பகுதியில் வசித்து வரும் பரமசிவம் (50) என்பவரது வீட்டில் எரி சாராயம் காய்ச்சியுள்ளார்.

மேலும் இரண்டு பேரல்களில் தலா 100 லிட்டர் சாராய ஊரல்கள் போட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பரமசிவம் என்பவரை போலீசார் கைது செய்து அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊரல்களை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இரண்டு லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

திருவாரூரில் ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மடத்தில் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா

புதுச்சேரியில் தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டது..ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…