in

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்


Watch – YouTube Click

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்

 

அருப்புக்கோட்டை அண்ணாமலை நகரில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 100 சவரன் தங்க நகை ரூ 1,00,000 பணம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கைவரிசை; சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அண்ணாமலைநகரை சேர்ந்தவர் ருக்மணி(75). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.‌ குழந்தைகள் அனைவரும் வெளியூரில் வசித்து வருவதால் ருக்மணி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ருக்மணி தனது வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் துஷ்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை அந்த வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு ருக்மணி வீட்டின் முன்பக்க கேட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 80 சவரன் தங்க நகைகள் மற்றும் தங்க காயின்கள் சிறிய தங்க பொருட்கள் என மொத்தம் 100 சவரன் தங்க நகைகள் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துவிட்டு சுமார் இரண்டு முப்பது மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து கேட்டை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.‌

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதேபோல ருக்மணி வசிக்கும் தெருவில் உள்ள வெளிநாட்டில் வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வீட்டிலும் வீட்டின் பூட்டை உடைத்து
2 சவரன் தங்க நகை, ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளை சம்பவம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கொடைக்கானல் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி