in

வாயில் எலியை கவ்வியபடி பயணிகளை மிரட்டிய வாலிபர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

வாயில் எலியை கவ்வியபடி பயணிகளை மிரட்டிய வாலிபர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வாயில் எலியை கவ்வியபடி நடனமாடினார்.

இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சிலர் வீடியோவும், புகைப்படமும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து கடை வியாபாரிகள் தெரிவிக்கையில்,வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு இங்கேயே உள்ளார் என்றும், இவரது குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள்? என தெரியவில்லை என கூறினார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வலர்கள் இவரை திருப்பத்தூரில் உள்ள மன நல மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்து மீண்டும் தப்பி ஓடி வந்து விட்டார். எனவே இவருக்கு மீண்டும் மன நல சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று கூறினர்.

காதல் படத்தில் கிளைமாக்ஸில் வரும் பரத் போல இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாகவும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் உள்ளது என்று பொதுமக்களும் வியாபாரிகளும் தெரிவித்தனர்.

What do you think?

நத்தம் அருகே 108 வாகனத்தில் பிரசவித்த குழந்தை தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

ஆனித் திருமஞ்சன விழாவினையொட்டி ஜய்யங்குள தீர்த்தத்தில் தீர்த்தவாரி மேற்கொண்ட அண்ணாமலையார்