in ,

குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா கோலாகல கொண்டாட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சிவதலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை எதிரே உள்ள தெப்பக்குளத்தில் உற்சவ திருவிழா நடைபெற்றது..

இந்த விழாவிற்காக தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கொடுங்கை விமானம் கொண்டுவரப்பட்டு ரத உற்சவம் நடத்தப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் உபயதாரர்கள் மூலம் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மூங்கில் பிரம்பினால் கொடுங்கை விமானம் வடிவமைக்கப்பட்ட புதிய தேரில் இன்று தெப்ப உற்சவம் நடைபெற்றது..

இந்த நிலையில் இன்று தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு இலஞ்சியிலிருந்து வள்ளி தெய்வானையுடன் திருவிலஞ்சி குமாரர் குற்றால நாதசுவாமி கோவிலுக்கு காலை அழைத்து வரப்பட்டது. பின்னர் மாலையில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மன், திருவிலஞ்சி குமரன் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்ப உற்சவ தேரில் எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வரும் வைபவம் நடைபெற்றது..

இதில் தென்காசி, மேலகரம் காசிமேஜபுரம், குடியிருப்பு நன்னகரம், சிந்தாமணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர் இவ்விழாவைக் காண வந்த அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

மாசி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை

சிதம்பரம் அருகே அரசு டவுன் பஸ் சாலை ஓரத்தில் வயலில் கவிழ்ந்து விபத்து