in

மயிலாடுதுறையில் பரபரப்பை கிளப்பிய சப்தம் வீடுகளில் விரிசல் மக்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறையில் பரபரப்பை கிளப்பிய சப்தம் வீடுகளில் விரிசல் மக்கள் அதிர்ச்சி

 

மயிலாடுதுறையில் வெடிகுண்டு வெடித்தது போல் இரண்டு முறை எழுந்த சத்தம், மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது போல பலத்த சப்தம் ஏற்பட்டது.

தொடர்ந்து இரண்டு முறை சத்தம் எழும்பியதால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது.

இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் விசாரணை மேற்கொண்ட போது தஞ்சையில் இருந்து செல்லும் போர் ஜெட் விமானங்கள் வெளியிடும் ஏர் ரிலீஸ் சப்தம் என்று விளக்கம் அளித்தனர்.  இதேபோல் கடந்த மாதம் பலமுறை சப்தம் கேட்டதால் வழக்கமான ஒன்று என பொதுமக்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் சப்தம் மிகுந்த சமயத்தில் நில அதிர்வு போன்று மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை பகுதியில் உணரப்பட்டது. அங்குள்ள சில வீடுகளின் நிலை கதவுகள் லேசாக சேதம் அடைந்தது.

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடை டைல்ஸ்கள் பெயர்ந்து விடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்