in

மூதாட்டி இடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு

மயிலாடுதுறை புறநகர் பகுதியில் நடை பயிற்சி சென்ற மூதாட்டி இடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு, மயிலாடுதுறையில் தொடரும் வழிபறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் :-

மயிலாடுதுறை நகரின் புறநகர் பகுதியான பேச்சாவடி பகுதியில் மேகனா பள்ளி சாலையில் வசித்து வருபவர் சுமார் 60 வயதான மலர்கொடி. இன்று காலை அப்பகுதியில் மலர்கொடி நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கன்னிமைக்கும் நேரத்தில் மலர் கொடியின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் சிறப்பு காவல் படையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் மயிலாடுதுறையின் புறநகர் பகுதியில் மிளகாய் பொடி தூவி டாஸ்மார்க் சூப்பர்வைஸரிடம் லேப்டாப் பறிப்பு சம்பவம்,என்று தொடரும் கொள்ளை சம்பவங்களால் மயிலாடுதுறை மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

What do you think?

குத்தாலம் காந்தி பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மயிலாடுதுறையில் பேட்டி