in

நடிக்க வந்ததால் வீட்டில் மரியாதை இல்லை …. நடிகை ரேகா


Watch – YouTube Click

நடிக்க வந்ததால் வீட்டில் மரியாதை இல்லை …. நடிகை ரேகா

கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரேகா தான் சினிமா துறைக்கு வந்ததால் சொந்த வாழ்க்கையில் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார்.

குன்னூரில் இருக்கும் போது சின்ன வயதில் நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும் ஆனால் எங்க அப்பா அதை பார்ப்பதற்கு அனுமதித்ததில்லை ஒரு நாள் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்த போது என் அப்பா அதை ஏற்கவில்லை அம்மாவின் துணையுடன் நான் அடம் பிடித்து சினிமாவில் நடிக்க வந்தேன்.

நடிக்க வந்ததால் என் அப்பா ஒரு வருடம் என்னிடம் பேசாமல் இருந்தார். நான் நடித்த கடலோரக் கவிதைகள் படத்தை பார்த்தவர் அதன் பிறகு நான் நடித்த எந்த படத்தையும் பார்க்க வில்லை.

கடைசி வரை சினிமா விஷயங்களைப் என்னுடன் பேசியதில்லை ஆனால் எனக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தார். என் மகள் மீதும் அன்பாக இருந்தார்.

ஆனால் இப்பொழுது தோன்றுகிறது நாமாவது பேசி இருக்கலாமே என்று, நான் நடிப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டிருகளாம் . நான் சினிமா துரைக்கு வராமல் இருந்திருந்தால் என் அப்பாவின் அன்பு எனக்கு நிறைய கிடைத்திருக்கும் வெளியுலகத்தில் புகழோடு இருக்கும் பலருக்கு சொந்த வீட்டில் மரியாதை கிடையாது அப்படித்தான் எங்கள் வீட்டிலும் சினிமா பிரபலமாக இருந்தாலும் என் மீது மரியாதை கிடையாது.

2003 ஆம் ஆண்டு என் அப்பா வேளாங்கண்ணிக்கு சென்று வந்தவர் திடீர் என்று தவறிவிட்டார், அவரின் மறைவு என் வாழ்க்கையே திசை திருப்பி விட்டது கடைசி வரை என் சம்பாத்தியத்தில் ஒரு ரூபாய் கூட என் அப்பா வாங்கியதும் கிடையாது செலவு செய்ததும் கிடையாது.

அவர் மறைந்த பிறகு சென்னை கீழ்பாக்கத்தில் அவருக்கு ஒரு கல்லறை அமைத்து பராமரித்து வருகிறேன். நான் மறைந்த பிறகும் அங்கு தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று நெகிழ்ச்சியாக கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் வழுக்கு மரம் ஏறுதல்

மூன்றாவது திருமணம் செய்ய ஆசைதான்… ஹிந்தி நடிகர் அமீர்கான்