in

இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது

இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த அப்துல் சித்திக் மகன் ரோஷன் (19) என்பவர் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் ரோஷன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு ரோசனை கைது செய்துள்ளனர். மேலும் ரோஷனின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்,

What do you think?

மணப்பாறை அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்