in ,

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடைய அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடைய அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது

 

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உலகுடைய அம்மன் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஏராளமான பெண்கள் கூட்டு வழிபாடாக திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வைத்து மஞ்சளில் விநாயகர் பிடித்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை துவங்கினர்.

சிவாச்சாரியார் திருவிளக்கு மந்திரங்கள் கூற திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

தொடர்ந்து போற்றி மந்திரங்கள் காயத்ரி மந்திரங்கள் மகாலட்சுமி மந்திரங்கள் கூறி திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ உலகுடைய அம்மனை வழிபட்டனர்.

What do you think?

சாத்தூர் அருகே திடீர் பட்டாசு வெடி விபத்து சுமார் 10 கிலோ மீட்டருக்கு அதிர்வுகள்

யுனைடெட் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் காய்கறி மற்றும் கனிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு