மோகனூர் பெருமாள் ஆலயத்தில் சித்தரைமாத திருவோண நட்சத்திர திருக்கோடி, கருட சேவை
நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் சித்தரைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி, கருட சேவை பக்தர்கள் வழிபாடு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹா’ரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெஙகட்ரமண பெருமாள் ஆலயத்தில் சித்திரைமாத திருவோணநட்சத்திர தினத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம் மற்றும்கருடசேவை மிக விமர்சையாக நடைபெற்றது முன்னதாக உற்சவ எம்பெருமான் கருட சேவையில் காட்சி அளித்தார்.
பின்னர் சிறிய பல்லாத்தில் கருடசேவையில் அலங்கரிக்கப்பட்ட பெருமாளை பட்டாச்சாரியார்கள் தோள்களில் சுமந்தவாறு திருக்கோவில் சுற்றி வந்தனர் அப்போது சக்கரத்தாழ்வார், பத்வாவதி தாயார், தன் வந்திரி, லட்சுமி ஹயக்ரீவர், சம்போன கோபாலான், காவேரி தாயார், உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின் கோவில் முன் உள்ள திருக்கோடி கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள்ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை வணங்கிச் சென்றனர்.