in

திறந்த வெளி சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்


Watch – YouTube Click

திறந்த வெளி சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்

 

உலகம் முழுவதும் (திங்கட்கிழமை ) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக இது உள்ளது.

பக்ரீத் பண்டிகை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இறைவனின் தூதர் இப்ராஹீம் நபி தியாகத்தை போற்றும் விதமாக இந்த நாளை தியாகத் திருநாளாகவும், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ்பயணம் இந்த நாளில் தான் நிறைவேற்றப்படுவதால் இதை ஈகை பெருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள ஜிம்மா மஸ்ஜித், சுல்தான் பேட்டியில் உள்ள பள்ளிவாசல், நெல்லித்தோப்பு மசூதி, காரைக்காலில் உள்ள பெரியபள்ளி வாசல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பள்ளி வாசல்களில் இன்று காலை 6.30 மணி முதல் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அதே வேளையில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் சுல்தான்பேட்டையில் நடந்த திறந்த வெளி சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

இந்த சிறப்பு தொழுகையில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
தொழுகை நடைபெறும் அனைத்து பள்ளிவாசல்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதே போல் கடற்கரை சாலை காந்தி திடல் எதிரே தவ்ஹீத் ஜமா்அத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சிறப்பு தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

பேட்டி…ஜைனூதீன் பார்க்கவி…சுல்தான்பேட்டை…பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் புதுச்சேரி மாநில மக்களுக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டுள்ளனர்..


Watch – YouTube Click

What do you think?

கலை மாமணி திரைப்படநடிகர் பாடகர் டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் இருந்து 9 கலசங்கள் கீழே இறக்கப்பட்டன