in

சேது எக்ஸ்பிரஸ் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் – 30 நிமிடம் ரயில் தாமதம்

சேது எக்ஸ்பிரஸ் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் – 30 நிமிடம் ரயில் தாமதம்

 

இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் – 30 நிமிடம் ரயில் தாமதம்

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி கழன்றுள்ளது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்து 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது.

What do you think?

தெலுங்கானா முதலில் கண்டெய்னர் பள்ளி இப்போது கண்டெய்னர் மருத்துவமனை

சரக்கு லாரி மீது பக்தர்கள் வந்த வேன் மோதி 18 பக்தர்கள் படுகாயம்