in

திருவலஞ்சுழியில் கொலை மற்றும் தற்கொலைக்கு நீதி கேட்டு சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் கொலை மற்றும் தற்கொலைக்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன
ஆர்ப்பாட்டம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்கிற தலித் இளைஞரை செங்கல் கால்வாய் தொழிலுக்கு அழைத்து சென்று உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தர்மராஜ் மனைவி சங்கீதாவை மிரட்டி கொலையை திசைதிருப்பியும்,கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வரும் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவராஜ் மீது பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் எஸ். சி. எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும்.,

தஞ்சாவூர் ஒன்றியம் வடிகால் கிராமத்தை சேர்ந்த கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் திருமதி. வசுந்தரா தேவியின் மகள் சாருமதி தஞ்சாவூர் கிங்ஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் விராளிப்பட்டியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் மகன் மாணிக்கம் சாருமதியை காதலித்து ஏமாற்றி அவள் தற்கொலைக்கு காரணமான
மாணிக்கத்தின் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில்
எஸ். சி. எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி திருவலஞ்சுழி கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஆனந்த பாபு வரவேற்று பேசினார்.

காவல் துறையைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

காரைக்கால் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு

மதுரையில் பிரபல திரையரங்கம் இடிக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் வேதனை