in ,

திண்டிவனம் – ஸ்ரீ இருசார் அம்மன் கோவில் – சித்திரை திருவிழா

திண்டிவனம் – ஸ்ரீ இருசார் அம்மன் கோவில் – சித்திரை திருவிழா

திண்டிவனம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ 
இருசார் அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தென்நெற்குணம் கிராமம் இருசார் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இருசார் அம்மனுக்கு ஊர் பொதுமக்கள்
ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர்.

மேலும் ஊரணி பொங்கல் இட்ட பெண்கள் பம்பை இசை ஒலிக்க கிராமம் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. இதில் தென்நெற்குணம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

ஆவின் பால் விற்பனை நிலைய கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

சிவகங்கை – சோழபுரம் ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்