in ,

 திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா

 திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்ப தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா என்னும் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்பத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மகா லட்சுமியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வண்ண மலர்களால் உற்சவர் அம்மன் ஸ்ரீ மகா லட்சுமியாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

நெல்லையில் இரண்டாவது நாளகவும் பலத்த மழை பெய்தது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மழை நீரில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகும் நிலை விவசாயிகள் வேதனை