in ,

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

 

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வைகுண்டர் அமர்ந்த திருத் தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 192-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான 11-ம் திருநாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை நடந்தது. பகல் 12.30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.

திரளான பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகர… அரகர சிவ சிவ.. என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்திற்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது.

What do you think?

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

குற்றால அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி