in ,

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்

 

சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பழமை வாய்ந்த அண்ணன் பெருமாள் கோவில் ஆலயம் அமைந்துள்ளது.

108 வைணவ திவ்யதேசங்களில் 39 வது திவ்யதேசம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை யொட்டி 11 வது நாளான நேற்று தெப்போற்சவம் நடைபெற்றது.

இதனையடுத்து பெருமாளும் தாயாரும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

What do you think?

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்த வாரி

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவரா திருவிழா