in

புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்


Watch – YouTube Click

புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

 

புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி பாக்க முடையான்பேட், முல்லை நகரை சேர்ந்த ஹரிஹரன்- ராதிகா தம்பதியரின் மகன் கிஷோர் (23) பி. டெக்., படித்துள்ளார். இன்று காலை நண்பர்களுடன் லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் கிஷோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவன் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது…


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ 20 ஆயிரம் லஞ்சம்

தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி