in

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு பகுதியில் கழிவு நீர் வடிகால் வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு பகுதியில் கழிவு நீர் வடிகால் வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சியில் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான திருவெறும்பூர் மலைக்கோவில் மாதா கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன அந்தப் பகுதியில் அடிப்படைத் தேவைகளான கழிவு நீர் வடிகால் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவு நீர் அனைத்தும் அருகில் உள்ள காலியாக உள்ள வீட்டு மனைகளில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் குடி இருப்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் பல வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளதாகவும் அதனால் அதை பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலை இருப்பதாகவும் அந்த பொதுக்களிப்பீடத்தில் பைப்புகள் உடைந்தும் கழிப்பிட பேஷன்கள் உடைந்து இருப்பதாகவும் இதை உடனடியாக சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்பட்டு அனைத்து கழிவுநீர்களும் செல்லும் வகையில் கழிவு நீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கும் திருச்சி மாநகராட்சிக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத 68,000 பணம் பறிமுதல்

செஞ்சி பகுதியில் தொடர் நள்ளிரவு திருட்டு.