புல்வாமா தாக்குதல் ஆறாம் ஆண்டை நினைவு கூர்ந்து த வெ க சார்பில் – கருப்பு தினமாக அனுசரிப்பு
புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு – த வெ க நிர்வாகிகள் – மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிட மௌன அஞ்சலி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடை தெரு மயிலாடுதுறை மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஆறாம் ஆண்டை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஆறாம் ஆண்டை கடக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, குறிப்பாக தமிழக வெற்றிக்கழகத்தின்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நகர காவிக்க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த அஞ்சலி நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அறிவரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவ பிரகாசம், ஜாஸ்மின், ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மனோகரன், பிரபஞ்சன், குமார், அம்பேத், மாரியப்பன், தமிழரசன், மோஹித், பிரபு, விக்னேஷ், சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.