in

அய்யம்பேட்டை அருகே இரண்டு தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..

அய்யம்பேட்டை அருகே இரண்டு தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..

 

காயமடைந்த 19-பேர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி..

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வயலூர் மீன் பண்ணையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த பி.எல்.ஏ என்ற தனியார் பேருந்தும், அதேபோல கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த லிங்கன் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.

இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 19-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தனியார் பேருந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

தயாரிப்பாளர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷ் இனி படங்களின் நடிக்க தடை…

சம்பா சாகுபடிக்காக தஞ்சை கல்லணையிலிருந்து வினாடிக்கு 3400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது