in

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள்

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள்

 

திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்தில் வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள் பலி

திருச்சி சோமரசன்பேட்டை அருகே மல்லியம்பத்து எட்டு மாதிடலை சேர்ந்த ராதிகா, செல்வி இருவரும் வாழைப்பயிரில் ஊடுபயிராக பருத்தி சாகுபடி செய்துள்ள நிலத்திற்க்கு உரம் போடுவதற்காக காலை வயலுக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது வயலில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து ராதிகா, செல்வி இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்கள். உடலில் சில இடங்களில் மின்சாரம் பாய்ந்து கருகி நிலையில் காயம் உள்ளது.

உடனடியாக காவல்துறையினர் மின்வாரிய அதிகாரிகள் தகவல் கொடுக்கப்பட்டு மின்னிருத்தம் செய்யப்பட்டு மின்கம்பி அப்புறதப்படுத்தப்பட்டது. இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விவசாய பணிகளுக்கு சென்ற இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி பலியானது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு தேர்தல் பிரச்சாரத்தை கையாண்டதில்லை- துரை வைகோ பேட்டி