in ,

ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

 

தீவனூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவமம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் தீவனூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த ஸ்ரீ பொய்யாமொழி விநாயகருக்கு மகாதிபாரதனை, கும்ப தீபம், நட்சத்திர தீபம், மற்றும் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம், கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் நா.மணிகண்டன் அவர்கள் செய்து இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி

புற்றுநோயின் முன்றாம் நிலையில் தவிக்கும் நடிகை