in

வயதானவரை கல்யாணம் செய்வதில் தவறென்ன …நீலிமா ராணி

வயதானவரை கல்யாணம் செய்வதில் தவறென்ன …நீலிமா ராணி

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பிறகு சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை நீலிமா ராணி.

திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் இசைவாணனை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா.

பிறகு சின்னத்திரையில் நுழைந்தவர் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி  உள்ளிட்ட பல சீரியல்கலில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

இவர் இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர் சினிமா துறையில் இல்லை என்றாலும் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டு இவரும் இணைந்து ஒரு படத்தை தயாரித்தனர்.

ஆனால் பாதியிலேயே அந்த படம் நின்றது அதன் காரணமாக நான்கு கோடி ரூபாய் கடன் ஏற்பட்டு சமீபத்தில் தான் அந்த கடனை அடைத்தோம் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

எனது கணவர் இசைவாணனை எனக்கு 20 வருடங்களாக தெரியும் எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம் எங்களுக்கு இடையே புரிதல் இருக்க முக்கிய காரணம் வயது வித்தியாசம்.

வயது முதிர்ந்தவரை நான் திருமணம் செய்ததாக பலர் கமெண்ட் செய்கிறார்கள். ஆனால் வயது வித்தியாசம் இருப்பதனால் தான் அவருக்கு பக்குவம் இருக்கிறது அப்பொழுதுதான் இருவருக்குள்ளும் ஒரு பேலன்ஸ் வொர்க் அவுட் ஆகும்.

இரண்டு பேருமே பக்குவம் இல்லாம் இருந்தால் வாழ்க்கை சொதப்பல் ஆகிவிடும். இவர்களுக்கு இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் வயது வித்தியாசம் பார்காமல் இவரை கல்யாணம் செய்திருப்பதாக பல கருத்து தெரிவித்தாலும் இன்றும் நாங்கள் காதல் தம்பதிகளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறியுள்ளார். அன்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நீலிமா நிருபித்துவிட்டார்.

What do you think?

அட்லியிடம் கேட்காம விட்டது தப்பா போச்சி சாக்‌ஷி அகர்வால்

ஆஷ்லின் குளோஸில் …உள்ள மூன்று பெண்களை கொன்ற கைல் கிளிஃபோர்ட் ..தீவிர தேடல்