in

ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு? – துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்


Watch – YouTube Click

ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு? – துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு இருக்கிறது. டிவிகளுக்கு வேண்டுமானால் ரேட்டிங் குறைந்து விடலாம்.உத்தர பிரதேசமே போகாதவர்கள் அத்தேர்தல் பற்றி தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். இங்கே உட்கார்ந்த நிலையில் அங்குள்ளோர் மனதை துல்லியமாக கண்டறிய கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டார்களா என தெரியவில்லை கேள்வி…துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கடும் சாடல்.

புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளை சந்தித்தார்..முன்பை விட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடும் நடவடிக்கையால் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும். எங்கெல்லாம் கஞ்சா விற்கிறதோ அதிகாரிகள் மற்றும் என் கவனத்துக்கும் கொண்டு வாருங்கள். அனைவரும் ஒத்துழைப்பு தருவது மூலம் சமூக குற்றங்களை தடுக்க முடியும். காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. போலீஸார் முழு முயற்சியுடன் கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தேர்தல் நன்னடத்தை விதி முடிந்தவுடன் மக்களுக்கு தேவையானதை கேட்டு அதற்கு செயல்வேகம் கொடுக்க புதுச்சேரி அரசு நிர்வாகம் முடுக்கி விடப்படும்.ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு இருக்கிறது. டிவிகளுக்கு வேண்டுமானால் ரேட்டிங் குறைந்து விடலாம்.உத்தர பிரதேசமே போகாதவர்கள் அத்தேர்தல் பற்றி தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். இங்கே உட்கார்ந்த நிலையில் அங்குள்ளோர் மனதை துல்லியமாக கண்டறிய கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டார்களா என தெரியவில்லை.

தினம்தோறும் டிவியில் எதை பேசுகிறீர்கள்? இவ்விவாதம் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்துவதில் யார் பின்தங்கியுள்ளார்கள் என்று யாராவது பேசுகிறார்களா? மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் வேறு மாநிலத்தில் ஒரு தேர்தல் வந்து விடுகிறது. தேர்தலை பற்றி மட்டும் பேசுகிறீர்கள். ஒரு தேர்தல் என வரும்போது நிச்சயமாக மக்கள் கவனமும் ஊடகத்தின் கவனமும் முன்னேற்றத்தை நோக்கி மாறும். அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் அத்தியாவசியம் என்று கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடன்

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கசென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு