in

லண்டன் மேயர் தேர்தலில் வெல்ல போவது யார்?


Watch – YouTube Click

லண்டன் மேயர் தேர்தலில் வெல்ல போவது யார்?

 

ஐரோப்பாவில் பொருளாதார ரீதியில் மிகவும் வலிமை பெற்று விளங்கும் நகரமாக லண்டன் திகழ்கிறது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பலவும் இங்கே உள்ளன. பல்வேறு மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. இந்நிலையில் லண்டன் நகரின் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

லண்டன் மேயராக தற்போது பதவி வகித்து வருபவர் சதிக் கான். இவர் 2016ஆம் ஆண்டு முதல் மேயர் நாற்காலியில் இருக்கிறார்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்று லண்டன் மேயராகும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார். இவருக்கு போட்டியாக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த சுசன் ஹால், கிரீன் கட்சியை சேர்ந்த ஸோ கார்பெட், லிபரல் டெமகிராட்ஸ் கட்சியின் ராப் பிளாக்கி, ரிஃபார்ம் யுகே கட்சியை சேர்ந்த ஹோவர்ட் காஸ் உள்ளிட்டோர் நிற்கின்றனர். இதுதவிர மேலும் 8 பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தருண் குலாட்டியும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு வயது 63. சுயேட்சையாக மேயர் தேர்தலில் நிற்கிறார். நிதித்துறையில் சிறப்பான அனுபவம் பெற்றவர். ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்துள்ளார். HSBC வங்கியில் சர்வதேச பிரிவின் மேலாளராக பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு லண்டனில் பணி நியமன ஆணை கிடைத்ததும், அங்கேயே செட்டில் ஆகும் முடிவுக்கு வந்தார்.

லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி தருண் குலாட்டி பேசுகையில், நான் பெரிய அளவில் தொழில்களை செய்துள்ளேன். பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளேன். எனக்கு மேயராகும் வாய்ப்பு கிடைத்தால் புதிய பணத்தை அறிமுகம் செய்வேன். சர்ச்சைக்குரிய ULEZ பாலிசியை ரத்து செய்வேன். இந்த சட்டத்தின் படி லண்டனில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வாடகையை முறைப்படுத்துவேன். காஸாவின் துயர நிலையை கண்டு அவர்களுக்கு குரல் கொடுத்து வந்துள்ளேன். எனவே இஸ்லாமியர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும். குற்றங்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதிகளில் காவல் நிலையங்களை மீண்டும் திறப்பேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இந்நிலையில் லண்டன் மேயர் நாற்காலியில் பாகிஸ்தான் வம்சாவளி நபரை எதிர்த்து இந்திய வம்சாவளி நபர் வெற்றி பெறுவாரா? எனக் கேள்விகள் எழுப்பி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஆனால் கள நிலவரம் அப்படியாக இல்லை. மூன்றாவது முறை சதிக் கான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த சதிக் கான் வெற்றி பெற 40 சதவீதத்திற்கு மேல் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் சுசன் ஹால், கிரீன் கட்சியின் ஸோ கார்பெட், லிபரல் டெமகிராட்ஸ் கட்சியின் ராப் பிளாக்கி, ரிஃபார்ம் யுகே கட்சியின் ஹோவர்ட் காஸ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த தருண் குலாட்டிக்கு மிகவும் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ரசிகர் ஒருவரை கோபமாக திட்டிய காஜோல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூல்ட்ரிங்ஸ் கடையில் ரகளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது