in

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தமிழக ஆளுநர் வழிபாடு

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தமிழக ஆளுநர் வழிபாடு

 

நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வருகை தந்தார்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த தமிழக ஆளுநர் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு அதிபர் இருதயராஜ் பூங்கொத்துக்கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே சென்ற ஆளுநருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் மெழுகுவர்த்தி ஏந்தி மனம் உருகி மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவே மரியா கட்டிடத்தில் உள்ள ஓவியங்களை பேராலய அதிபரிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

What do you think?

70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை துவக்கம்

மேல்பேரடிக்குப்பம் ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா